லீமா, டிச. 9 –
பெரு நாட்டுக் கால்பந்து அணியின் கேப்டன் பவுலோ குவரேரோ ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக, அவர் போட்டிகளில் பங்கேற்க ஓராண்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.. உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கான தகுதிச் சுற்றில் அர்ஜெண்டினா உடனான ஆட்டத்தில் பெரு அணி கேப்டன் பவுலோ குவரேரோ கோகைன் என்கிற ஊக்க மருந்தைப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி உலகக் கால்பந்துக் கூட்டமைப்பு அவருக்கு ஓராண்டு தடைவிதித்துள்ளது.
இந்தத் தடை நவம்பர் மூன்றாம் தேதியில் இருந்து முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்துலக கால்பந்துப் போட்டிகளிலும், உள்ளூர்ப் போட்டிகளிலும் ஓராண்டுக்கு அவர் விளையாட முடியாது.