லண்டன், டிச.21 –

2017/18 ஆம் பருவத்துக்கான இங்கிலாந்து லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் 1 – 2 என்ற கோல்களில் சாம்பியன்ஷிப் பிரிவைச் சேர்ந்த பிரிஸ்டல் சிட்டியிடம் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி, செல்சி, அர்செனல் ஆகிய கிளப்புகள் அரையிறுதி ஆட்டத்துக்கு தேர்வுப் பெற்ற வேளையில் மென்செஸ்டர் யுனைடெட் மட்டும் காலிறுதியில் வெளியேறியுள்ளது.

கடந்த பருவத்தில் லீக் கிண்ணத்தை வென்ற மென்செஸ்டர் சிட்டி, பிரிஸ்டல் சிட்டியை எளிதில் வீழ்த்தும் என கால்பந்து ரசிகர்களால் கணிக்கப்பட்டது. எனினும் முந்தைய சுற்றுகளில் வோட்போர்ட், ஸ்டோக் சிட்டி, கிறிஸ்டல் பேலஸ் போன்ற பிரீமியர் லீக் கிளப்புகளை வீழ்த்திய பிரிஸ்டல் சிட்டி இம்முறையும் அதிரடி படைத்துள்ளது.

இரண்டாம் பாதி ஆட்டத்தின் 51 ஆவது நிமிடத்தில் ஜோ பிரையன் , பிரிஸ்டல் சிட்டியின் முதல் கோலைப் போட்டார்.எனினும் ஏழு நிமிடங்களுக்குப் பின்னர் சிலாதான் இப்ராஹிமோவிச் போட்ட கோலின் மூலம் மென்செஸ்டர் யுனைடெட் ஆட்டத்தை சமப்படுத்தியது.

ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் கோரேய் ஸ்மித் போட்ட கோல், பிரிஸ்டல் சிட்டியின் வெற்றியை உறுதிச் செய்தது. அரையிறுதி சுற்றில் பிரிஸ்டல் சிட்டி பலம் வாய்ந்த மென்செஸ்டர் சிட்டியை எதிர்கொள்ளவிருக்கிறது.