கோத்தாராஜா, டிச. 27-
சமுதாயப் பணிகளில், கிளைகளுக்கிடையில் ஒற்றுமையை நிலைநாட்டுவதன் வழி மக்களுக்கு நல்ல ஓர் எடுத்துக்காட்டாக அமைய முடியும் என கோத்தா ராஜா தொகுதித் தலைவரும் மத்திய செயலவை உறுப்பினருமான டத்தோ ஆர் எஸ் மணியம் குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை, கோத்தா ராஜா தொகுதி ஏற்பாடு செய்திருந்த நட்புமுறை பூப்பந்து போட்டியில், கிளைத்தலைவர்கள், மகளிர், இளைஞர், புத்ரா, புத்ரி உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர். இம்மாதிரியான விளையாட்டுப் போட்டிகள், உடல் நலனுக்கு மட்டுமல்லாது, சிறந்த புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் என சிலாங்கூர் ம.இ.கா இளைஞர் அணித் தலைவர் கஜேந்திரன் தெரிவித்தார்.
தொகுதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பூப்பந்து போட்டியில், முதல் இடத்தை அர்விந்த் கோட்டசாமி, ராஜேஸ் கண்ணாவும் வென்றனர். இளைஞர் அணியிலிருந்து சசிதரனும் லோகேனும் வென்றனர். புத்ரி அணியிலிருந்து சாந்தியும் லோகேஸ்வரியும் முதல் இடத்தைத் தட்டிச் சென்றனர்.
இரண்டாவது நிலையை குணசேகரும் அன்பழகனும் வென்ற வேளையில், இளைஞர் அணியிலிருந்து கணேசாவும் யுகாவும் வென்றனர். புத்ரியின் இரண்டாவது இடத்தை தனம், சீதா ஆகியோர் வென்றனர்.