இளையராஜாவும் வைரமுத்துவும் ஏன் பிரிந்தார்கள் என்பதைவிட மீண்டும் எப்போது சேர்வார்கள் என்ற ஏக்கமே தமிழ் சினிமாவை இன்னும் காக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

தமிழும் இசையும் சேர்ந்த அந்த பொற்காலம் மீண்டும் வராதா என்று எண்ணி எண்ணி காலங்கள் கடந்தனவே மீதம். முதலில் யார் தொடங்க என்ற கேள்விக்கு இன்றைக்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறார் வைரமுத்து.

பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை,  இன்று தமது டுவிட்டர் பக்கத்தில் காதல் வார்த்தைகளால் வாழ்த்தி மரியாதை பெற்றிருக்கிறார் வைரமுத்து.  இவரின் இந்த காதலுக்கு வாழ்த்துகள் குவிகின்றன. நீங்கள் இருவரும் சேர வேண்டும் என்ற வேண்டுதலும் அங்கு நிறைகின்றன.

பத்ம விருதுகள் பெறும் 85 இந்திய ஆளுமைகளுக்கும் என் வாழ்த்துக்கள். பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை

“காற்றின் தேசம் எங்கும் –

உந்தன் கானம் சென்று தங்கும்

வாழும் லோகம் ஏழும் –

உந்தன் ராகம் சென்று ஆளும்

வாகை சூடும்” – என்ற காதல் ஓவியம் வரிகளால் வாழ்த்துகிறேன்.

இவ்வாறு வைரமுத்து பதிவு செய்துள்ளார்.  எப்படி இருந்தாலும், இந்த காதல் மீண்டும் பழைய வசந்தத்தையும் நட்பையும் புதுபிக்க வேண்டும் என்பதே உலகறிந்த ஆவல்.