”நரகாசூரன்”!!!!  இந்த பெயருக்கு ஏற்றார்போல, படம் வருவதற்குள் அத்தனை பூகம்பங்களை கிளப்பி வருகிறான் அந்த நரகாசூரன்.

”துருவங்கள் ”’16” படத்தின் மூலம் மிக இளம் வயதில் நம்பிக்கைக்குரிய இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தவரான கார்த்திக் நரேனுக்கும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் இடையே  இருக்கும் மோதல் வலுக்கிறது.

இன்று கிடைத்திருக்கும் தகவல்களைப் பார்க்கும்போது. இந்த இருவருக்குள்ளும் கடந்த சில காலமாகவே உட்பூசல் இருந்து வந்ததுபோல் தெரிகிறது.

காத்திக் நரேன் தற்போது ‘நரகாசூரன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கிறார். இந்நிலையில், கௌதம் மேனனை விமர்சிக்கும் விதமாக ட்வீட் போட்டிருந்தார் கார்த்திக் நரேன். இது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில், குப்பையைப் போல நடத்தினீர்கள் கௌதம் மேனன் ஒரு வீடியோவை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அதைக் குறிப்பிட்டு “பலர் என்னிடம் அறிவுரை கூறினாலும் நான் உங்களை நம்பினேன். ஆனால் என்னை நீங்கள் எங்களை குப்பை போல நடத்தினீர்கள். கடைசியில் நாங்களே முதலீடு செய்யவேண்டியதாகிவிட்டது. தயவு செய்து இனி யாரையும் இப்படி ஏமாற்றாதீர்கள்” என கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

அதோடு, ‘நரகாசுரன்’ படத்தை கவுதம் மேனன் தயாரிப்பதாக கூறினாலும் அவர் இந்த படத்திற்காக எந்த முதலீடும் செய்யவில்லை என்றும் அவர் கைகாட்டிய பத்ரி என்பவரும், நானும் தான் இந்த படத்திற்காக செலவு செய்தோம் என்றும், ஆனால் இந்த படத்தில் கிடைத்த பணத்தை வைத்து அவர் தனது மற்ற படங்களுக்கு செலவழித்ததாகவும், இதனால் ‘நரகாசுரன்’ படத்தின் போஸ்ட் புரடொசக்ன்ஸ் பணிகள் தாமதம் ஆகி வருவதாகவும் கார்த்திக் நரேன் கவுதம் மேனன் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவருடைய டுவீட்டுக்கு இயக்குனர் கவுதம் மேனன் தற்போது கொடுத்திருக்கும் பதிலடி, இன்னும் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமது சார்பில் இந்த படத்திற்காக தான் ரூ.9 கோடி செலவு செய்துள்ளதாகவும், படத்தில் பணிபுரிந்தவர்களின் சம்பள பாக்கி விரைவில் தீர்க்கப்பட்டு ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும்  கவுதம் மேனன் கூறியுள்ளார்.

இதில், ‘நரகாசூரன்’ படம் வெளிவருமா வரதா…. நரகாசூரனுக்கே வெளிச்சம்!!!