பெட்டாலிங் ஜெயா, ஏப். 4-
வரும் 14ஆவது பொதுத்தேர்தலில் போட்டியிடவிருக்கும் நம்பிக்கைக் கூட்டணியின் பொது அடையாள சின்னம் குறித்து அடுத்த வாரம் முடிவெடுக்கப்படும் என ஜ.செ.க. பொதுச்செயலாளரும் பினாங்கு மாநில முதலமைச்சருமான லிம் குவான் எங் தெரிவித்தார்.
நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் மன்ற கூட்டம் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம். அதில்தான் இவ்விவகாரம் விவாதிக்கப்படும். இப்போதைக்கு அடுத்த வாரம் அது குறித்து அறிவிக்கப்படும் என்று மட்டுமே என்னால் கூற முடியும் என அவர் கூறினார்.
பெர்சத்து கட்சி சங்கப் பதிவகத்தின் அங்கீகாரத்தைப் பெறாமலிருப்பதால் நம்பிக்கைக் கூட்டணியிலுள்ள கட்சிகள் பொதுச் சின்னத்தில் போட்டிடுவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது.