லண்டன், ஏப்.23 –

இங்கிலாந்து எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு செல்சி தகுதி பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வெம்பிளி அரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் செல்சி 2 – 0 என்ற கோல்களில் சவுத்ஹாம்ப்டன் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் செல்சியின் முதல் கோலை ஒலிவர் ஜீரோட் போட்டார்.

செல்சியின் இரண்டாவது கோலை அல்வாரோ மொராத்தா புகுத்தினார். இந்த வெற்றியின் மூலம் செல்சி மீண்டும் எப்.ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு தகுதிப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் இறுதி ஆட்டத்துக்குத் தகுதிப் பெற்ற செல்சி , அர்செனலிடம் தோல்வி கண்டது.

அப்போது அர்செனல் அணியின் முக்கிய ஆட்டக்காரராக இருந்த ஒலீவர் ஜீரோட் தற்போது செல்சி அணியில் இடம்பெற்றார். மே 19 ஆம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் செல்சி, மென்செஸ்டர் யுனைடெட்டை சந்திக்கவுள்ளது.