கோலாலம்பூர், மே 17
மலேசியாவில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை நலன் கருதி ஒரு சிறப்பு பணிக்குழு அமைக்கப்படும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்திய சமூகத்தினர், மகளிர், இளைஞர், பூர்வ குடிமக்கள் ஆகியோரின் நல்வாழ்வை கருதில் கொண்டு இந்த சிறப்பு பணிக்குழு அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.
மலேசியாவிலுள்ள சிறுபான்மை மக்களின் நலன்கள் மீது இந்தப் பணிக்குழு கவனம் செலுத்தும். அந்த வகையில் இந்திய சமூகத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று இன்று நம்பிக்கை கூட்டணியின் அதிபர் மன்ற கூட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இத்தகவலை வெளியிட்டார்.
இந்திய சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்னைகளை முக்கிய விஷயமாக கவனிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.