கோலாலம்பூர், மே 19-
விசாரணையை மேற்கொள்ளும் அமலாக்கத் தரப்பினர்கள் அதுப்பற்றிய தகவல்கள் சமூகவலைத்தளங்களில் அதிவேகமாக பகிரப்படும் வகையில் கசிய விடக்கூடாது என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக, சோதணையில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் பற்றிய தகவல்கள் கசியக்கூடாது என அவர் கூறியதாக வேலென், ஓ & பார்ட்னர்ஸ் சட்ட நிறுவனம் மலேசியாகினிக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தது.
அவர்கள் துன்பத்தில் இருக்கும் நிலையில் அமலாக்கத் தரப்பினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவரும் நிலையில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றது. தானும் தனது குடும்பத்தினரும் விசாரணைக்கு ஒத்துழைப்பை வழங்கி வருவதாக கூறிய அவர், அமலாக்கத் தரப்பினர் சட்டத்தின் மேன்மை பாதுக்காக்கப்படுவதை உறுதி செய்வதோடு அதன் நடைமுறையில் பொதுமக்கள் அது குறித்து விவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். விசாரணையில் கசியும் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பகிரப்படுவதோடு எங்களின் குடும்பத்தை இலக்காகக் கொண்டு பொதுமக்களிடையே ஆத்திரம் மூட்டப்படுவதாகவும் ரோஸ்மா குறிப்பிட்டார்.
அமலாக்கத் தரப்பினர்கள் சமூகவலைத்தளங்களில் விசாரணையின் தகவல்களை கசிய விடக்கூடாது. மாறாக, ஒவ்வொரு நிமிடமும் தங்கள் கடமையின் நிபுணத்துவத்தை கடைப்பிடிப்பதோடு நிலைநிறுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.