கோலாலம்பூர், ஜூலை 30-
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு இணையான அதிகாரத்தைப் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தமக்கு வழங்கியிருப்பதாகக் கூறப்படுவதை பொருளாதார விவகாரத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி மறுத்தார்.

நான் அன்வாருடன் கடந்த 30 ஆண்டு காலமாக இருக்கிறேன். எங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் இதுபற்றி பேச மாட்டார்கள் என்று இந்த ஆரூடம் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் அஸ்மின் இவ்வாறு கருத்துரைத்தார்.

அன்வாருக்கு நான் விசுவாசமாய் இருப்பது பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது. நாட்டின் பிரதமரான மகாதீர் அரசில் இருக்கிறார். ஆனால், அவர் பிகேஆர் உறுப்பினர் இல்லை என்று அவர் கூறினார்.

முன்னதாக பிரதமர் பரிந்துரைத்த அமைச்சர்கள் பெயர் பட்டியலில் அஸ்மின் அலியின் பெயர் இதற்கு முன் இல்லை என்பதை பிகேஆரும் ஒப்புக் கொண்டது.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தலில் தலைவர் பதவிக்கு அன்வாருக்குச் சவாலாக தாம் இருப்பதாகக் கூறப்படும் ஆருடங்கள் குறித்து செய்தியாளார்கள் எழுப்பிய கேள்விக்கு அஸ்மின் அலி ஏதும் கூறவில்லை.