சென்னை, ஆக. 8-
திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் உடலுக்கு மக்களும் தொண்டர்களும் பிரியா விடை கொடுத்து வருவதால் ராஜாஜி அரங்கமே கண்ணீர் கடலாக மாறியது.
கருணாநிதி கடந்த 11 நாட்களாக அவர் உடல்நிலை பாதிப்பால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவரது உடல்நிலையில் ஏற்றமும் இறக்கமும் அவ்வப்போது வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து மருத்துவமனை முன்பு ஏராளமானோர் கூடினர்.
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் தொண்டர்கள் மற்றும் குடும்பத்தினர் பிரார்த்தனை செய்தும் அவை நிறைவேறவில்லை. கருணாநிதி மலேசிய நேரப்படி இரவு 8.40க்கு (இந்திய நேரம் மாலை 6.10) மரணமடைந்தார். இதனால் தொண்டர்கள் கதறி அழுதனர்.
ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், அரசின் இன்னாள் முன்னாள் அதிகாரிகளும், சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் பொது மக்கள் அஞ்சலி செலுத்த நீண்ட தூரம் காத்து கிடக்கின்றனர்.
தமிழ்சினிமாவின் பிரபலங்களும் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் , மெரினாவில் கலைஞர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய நீதிமன்றத்தில் வாதம் தொடர்ந்து வருகின்றது.