பெட்டாலிங் ஜெயா, அக். 3-

தாம் இறந்து விட்டதாகப் பரப்பப்படும் செய்தியை நம்ப வேண்டாமென பிரபல வழக்கறிஞர் என்.சுரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தாம் உயிரோடு பூரண நலத்தோடு இருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்

நான், எனது இறப்பை மறுக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் நலமோடு இருப்பதோடு தமது அலுவலகத்தில் காலையிலிருந்து பணியாற்றி வருவதாகவும் அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

தாம் இறந்து விட்டதாகச் செய்தி ஏன் பரப்பப்பட்டு வருகிறது என்பதுவும் யார் அதனைச் செய்வதும் தமக்குத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் இது போன்ற உணமைக்குப் புறபான செய்திகளை மக்கள் நம்ப வேண்டுடாமென அவர் வலியுறுத்தினார்.