கேமரன் மலை, அக். 14
இங்குள்ள பத்து 49, கம்போங் தீகா தெர்லா எனும் பகுதியில் இன்று காலை நிகழ்ந்த நிலச்சரிவில் மியன்மார் பிரஜைகள் இருவர் உயிரோடு புதைந்தனர். மேலும் ஒருவரை காணவில்லை.

இச்சம்பவம் குறித்து காலை 11.03 மணியளவில் தகவல் கிடைத்ததாகவும் மீட்பு படையினருடன் சம்பவம் இடத்திற்கு விரைந்ததாகவும் கேமரன் மலை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைவர் முகமட் ஹில்மி கஷ்பி மாட் சாலி தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் பெண்களான அவ்விருவரும் உயிரோடு புதையுண்டனர். இதில் காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.