ஈப்போ, டிச.11
ஜெலாப்பாங் மாஜூ ஜாலான் புஞ்சாக் ஜெலாப்பாங் 3இல் உள்ள இரண்டு மாடி கடைவீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இன்று பகல் 2.55 மணியளவில் நிகழ்ந்த இத்தீவிபத்தில் ஓர் இந்திய ஆடவரும் 5 மலாய்காரர்களும் மரணமுற்றதாக இதுவரை கிடைத்த தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

தகவல் கிடைத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தபோது அந்த கடை வீட்டில் 40 விழுக்காடு தீயில் சேதம் அடைந்துவிட்டதாக பேரா தீயணைப்பு மீட்புத் துறை பேச்சாளர் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைப்பதில் சிரமத்தை எதிர்நோக்கிய நிலையில் தீயில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. மீட்கப்பட்ட அறுவரின் உடல்களையும் தீயணைப்பு துறையினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களின் உடல்கள் சவப்பரிசோதனைக்காக ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. அங்கு தீ பரவியபோது பலத்த வெடி சத்தம் கேட்டதாக அங்குள்ள சிலர் தெரிவித்துள்ளனர்.