சிம்பாங் பூலாய் (பேரா)பிப். 22-

அரச மரம் விழுந்து பாதிப்பை எதிர்நோக்கிய அருள் மிகு பிள்ளையார் ஆலய சீரமைப்புக்கு பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி். சிவகுமார் வெ. 5000 நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார்,

கம்போங் கபாயாங் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் இம்மாதம் 15 ஆம் தேதி வீசிய புயலில் அங்கிருந்த அரச மரம் சாய்தது.

சுமார் 30 ஆண்டு கால பழமை வாய்ந்த அரச மரம் வேறோடு சாய்ந்ததில் அதன் அடிவாரத்தில் இருந்த பிள்ளையார் ஆலயம் பாதிப்பை எதிர்நோக்கியது.

இந்த சம்வம் குறித்து தகவலை தெரிவித்த சிவகுமார் நேரடியாக பாதிக்கப்பட்ட ஆலயத்திற்கு வருகை புரிந்து நிலைமையை கண்டறிந்தார், பின்னர் 5ஆயிரம் வெள்ளி நிதியுதவி வழங்குவதாகக் கூறினார்.

பிள்ளையார் ஆலய நிர்மாணிப்புக்கு நிதி வழங்கிய சிவகுமாருக்கு ஆலயத் தலைவர் மு. சுந்தரராசு நன்றியை தெரிவித்துக்கொண்டதுடன் ஆலயத்திற்கு இதற்கு முன்பு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் வெ. 30,000 வழங்கியதை நினைவுக் கூர்ந்தார்