ஈப்போ, மார்ச் 29-

இங்கு நடைபெற்று வரும் சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கிப் போட்டியில் இந்தியா போலந்தை 10 -0 கோல் எண்ணிக்கையில் , தோற்கடித்தது.

இந்தியா முந்தைய ஆட்டங்களின் வழி கண்ட வெற்றியில் 10 புள்ளிகளைப் பெற்று இறுதி சுற்றுக்கு தேர்வாகியிருந்தது.

இன்று இங்கு போலந்துடன் நடைபெற்ற ஆட்டதில்  இந்தியா 10 கோல்களை அடித்து போலந்தை வீழ்த்தி மேலும் மூன்று புள்ளிகளை பெற்று தொடந்து முன்னணி வகித்து வருகிறது.

இங்கு நடைபெற்ற வரும் சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கிப் போட்டியில் மலேசியா, கனடா, ஜப்பான், ஆகிய நாடுகளும் பங்கேற்றுள்ளது.

இநதப் போட்டிக்கான இறுதியாட்டம் இன்றிரவு  ( 30-3-2019)  8.35 மணிக்கு நடைபெறவிருக்கிறது.