சிரம்பான் ஏப் 7-
பிகேஆர் வேட்பாளர் டாக்டர் ஸ்ரீராமுக்கு எதிராக இனத்துவேச பாணியிலான பதாகைகள் வைக்கப்பட்டிருந்ததை தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 13ஆம் தேதி நடைபெறவிருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தலில் பிகேஆர் கட்சியின் சார்பில் டாக்டர் ஸ்ரீராம் போட்டியிடுகிறார்.
அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என இனத்துவேச பாணியில் மூன்று இடங்களில் ரந்தாவ் தொகுதியில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
இந்த இனத்துவேச பாணியிலான பதாகைகள் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தன. அரசியலில் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டுமே தவிர பழகின மக்களைக் கொண்ட நமது நாட்டில் இனத்துவேச பாணியிலான பதாகைகள் அதிர்ச்சியை அளிப்பதாக இருந்தன.
டாக்டர் ஸ்ரீராமிற்கு எதிராக வைக்கப்பட்ட இத்தகைய பதாகைகள் தமது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் ஒரு நடவடிக்கை என்றும் நெகிரி செம்பிலானில் முன்னாள் மந்திரி புசார் மான முகமட் ஹசான் கூறினார்.
இதனிடையே இனத்துவேச பாணியிலான பதாகைகள் வைக்கப்பட்டது தொடர்பாக பிகேஆர் கட்சியினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.