சுங்கை பட்டாணி ஏப்ரல் 18-

தாமான் வாங்கிலிருக்கும் பிளாஸ்டிக்கை சேமித்து வைத்திருக்கும் தொழிற்சாலை தீயில் அழிந்தது. பள்ளியில் இன்று விடியற்காலை 4 மணி அளவில் தீப்பட்ட தீப்பட்ட தொடங்கியது.

சுங்கைப்பட்டாணி , குருண், தீக்காம் பத்து ஆகிய இடங்களில் இருந்து வந்த எட்டு தீயணைப்பு வண்டிகளைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சுமார் 20 தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி போராட்டத்தில் பின் அருகில் உள்ள இடங்களுக்கு தீ பரவுவதை கட்டுப்படுத்தினர்.

இதனால் தீ அருகே உள்ள இதர தொழிற்சாலைகளுக்கு பரவுவது வெற்றிகரமாக தடுக்கப்பட்டது. உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இழப்பு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன .அதோடு தீ விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.