சென்னை:

நடிகர் அஜித்தின் சட்ட ஆலோசகர் பரத் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், சில தனிப்பட்ட நபர்கள், அங்கீகாரம் இல்லாத, சுய அதிகாரம் எடுத்துக் கொண்ட சில நிறுவனங்கள் தங்களுடைய அரசியல் மற்றும் சமூக ரீதியான கருத்துக்களை அஜித் பெயரில் பிரகடனப்படுத்தி வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ’இவர்கள் வன்மம் பேசி சமூக வலைதளங்களில் கீழ்த்தரமாக தாக்கி வருவது அஜித்துக்கு கடும் மன உளைச்சலை தருகிறது. இப்பேர்ப்பட்ட நபர்களை கண்டுபிடித்து களை எடுக்கும் அதே நேரத்தில் இவர்களது செயல்களால் பாதிக்கப்பட்ட எல்லோரிடமும் அஜித் நன் மன வருத்தத்தை தெரிவித்து கொள்கிறார்’ என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-