கோலாலம்பூர், ஆக.23-
ஹாங்காங்கில் ஏற்பட்டுள்ள கடும் புயல் காரணமாக சீனா, மாகாவ் மற்றும் ஹாங்காங் செல்லவிருந்த ஏர் ஆசியாவின் 14 விமான பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டதாக ஏர் ஆசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹத்தோ என்றழைக்கப்படும் இந்த புயல் எச்சரிக்கை தரவரிசையில் கடுமையான புயல் என்று குறிக்கும் எண் 10 வகை புயலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 118 கிமீ வரையும் சில சமயங்களில் 220 கிமீ வேகத்தில் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், மலேசியாவிலிருந்து ஹாங்காங், மாகாவ், சீனா ஆகிய நாடுகளுக்கு அட்டவணை இடப்பட்ட 14 பயணங்கள் ரத்துச் செய்யப்படுவதாக ஏர் ஆசியா தெரிவித்துள்ளது. இந்த திடிர் பயண ரத்துக் குறித்து அதில் பயணிக்கவிருந்த பயணிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியது.