கோலாலம்பூர், நவம்பர் 13-

அம்பாங் நாடாளுமன்றத்துடன் புக்கிட் அந்தாராபங்சா சட்டமன்றமும் லெம்பா ஜெயா சட்டமன்றமும் இணைந்து நடத்தும் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு வரும் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு  மணி 7.00க்கு டேவான் டத்தோ அமாட் ராசிலியில் நடைபெறவுள்ளது.

இந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஜூரைடா கமாருடின், பொருளாதார துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஷ்மின் அலி, லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் அனிசா தல்கா, தெராத்தாய் சட்டமன்ற உறுப்பினர் பிராயன் லாய் உட்பட  பல பிரமுகர்கள் கலந்து சிறப்பிக்கவிருக்கின்றனர்.

கலாச்சார நடனத்தோடு நவீன நடனம், பாடல்கள் என்று சிறப்பான முறையில் கலைநிகழ்ச்சிகளோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் அம்பாங் வாழ் அனைத்து இந்தியர்களும் கலந்து சிறப்பிக்க வேண்டுமென்று ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டனர். இது குறித்த மேல் விவரங்களைப் பெறுவதற்கு  0166062794, 0123073080, 0123319494 ஆகிய எண்களுடன் தொடர்புக் கொள்ளலாம்.