புத்ராஜெயா மார்ச் 2-

தேசிய முன்னணி மற்றும் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஊழல் வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக அவர் பிரதமர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் உடன் அமைச்சரவை குறித்து விவாதிப்பதற்காக புத்ராஜெயா செல்ல வேண்டுமென அவரது வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே இன்று பிரதமர், நாட்டின் தலைமைச் செயலாளர், அரசுத் துறை உயரதிகாரிகளுடன் சந்திப்பு நடத்துவதாகவும் எந்தக் கட்சித் தலைவர்களையும் இன்று சந்திக்கப் போவதில்லை என்றும் பிரதமர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.