செலாயாங், மார்ச் 24-

செலாயாங் மருத்துவப் பணியாளர்களின் தேவை குறித்து தெரியவந்தவுடன் வின்னர் டினாஸ்தி குழுமத்தின் தலைவர் டத்தோ ஶ்ரீ நிக்கி லியாவ் 10,000 முகக்கவசங்களையும் உணவுப் பொருட்களையும் நன்கொடையாக வழங்கினார்.

முன்வரிசையில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள் கோவிட்-19 தொற்றுக்கு எளிதில் ஆளாகக் கூடும் என்பதால் இவ்வுதவியைச் செய்ததாக அவர் தெரிவித்தார்.

அப்பொருட்களை செலாயாங் மருத்துவமை இயக்குநர் டாக்டர் சகினா அல்வி பெற்றுக்கொண்டதோடு டத்தோ ஶ்ரீ நிக்கி லியாவுக்குத் தனது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார்.