கோலாலம்பூர், ஆக. 6-

வேலையின்மை பிரச்சினை மற்றும் மலேசிய-சிங்கப்பூர் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து விளக்கமளிக்க நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்குப் பிறகு நாடாளுமன்ற உணவகத்தில் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணனைத் தாம் சந்தித்ததாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் தமது சமுக தளத்தில் கூறியுள்ளார்.

அந்த சந்திப்பில் மலேசியா-சிங்கப்பூர் தொழிலாளர்களின் பணிக்குழுக்களைச் சந்திக்க அமைச்சர் உறுதி அளித்ததாகவும் பிரபாகரன் குறிப்பிட்டார். 

முன்னதாக தாம் இந்த வேலையின்மை பிரச்சினைக்கு ஆய்வு செய்து தீர்வு காண மனிதவள அமைச்சகத்தில் சிறப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் பரிந்துரைத்துள்ளதாகக் கூறினார். அதோடு மனிதவள அமைச்சருக்கும் அவர் தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

முன்னதாக மலேசியா – சிங்கப்பூர் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் பிரபாகரன் கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.