வாஷிங்டன் டி.சி. | பிப்பரவரி 3 :-

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பவ்யா லால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பவ்யா லாலைத் தேர்வு செய்து ஜோ பைடன் நிர்வாகம் ஆணையிட்டுள்ளது.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பவ்யா லால் கடந்த சில மாதங்களுக்கு முன் நாசா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

2005-ஆம் ஆண்டு முதல் 2020 வரை STPI எனப்படும் அறிவியல், தொழில்நுட்பக் கொள்கை ஆய்வு நிறுவனத்தில் பணிபுரிந்த காலத்தில் விண்வெளித் தொழில்நுட்பப் பிரிவில் மிகுந்த அனுபவம் பெற்றவர்.

அணு அறிவியல் தொழில்நுட்பத்தில் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்ற பவ்யா லால், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக்கொள்கை – பொது நிர்வாகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். அணு அறிவியல் தொழில்நுட்பம் – பொதுக் கொள்கை சமூகத்தின் மிக முக்கிய உறுப்பினரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.