சென்னை | மார்ச் 10
தென்தமிழக கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றின் சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 13ம் தேதி வரை தென்தமிழக கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அம் மையத்தின் இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு , பாபநாசத்தில் தலா 2 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு:இணையதளத்தை காணவும்.