புத்ராஜெயா | ஏப்ரல் 29:-

மலேசியாவில் இன்று 3,332 பேருக்குப் புதிதாக இந்நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 404,925-ஐ எட்டியுள்ளது.

இன்று கோவிட்-19 பெருந்தொற்றால் 15 பேர் பலியானர். அதனால் தற்போது மொத்த மரண எண்ணிக்கை இது வரையில் 1,492 ஆக உயர்ந்துள்ளது.

இது வரையில் 309 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 147 பேருக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சைக்குப் பின்னர் இன்று 1,943 பேர் குணமடைந்துள்ள வேளையில் 375,340 பேர் மொத்தமாக இந்நோயிலிருந்து விடுபட்டுள்ளனர்.