கோலாலம்பூர், செப். 12-
உலகில் மலேசியர்கள்தான் தகவல்களை பெறுவதற்கும் பரிமாறி கொள்வதற்கும் வாட்சாப் செயலியை பயன்படுத்துவதாக தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாலே சைட் கெருவாக் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில் சுமார் 51% விழுக்காடு மலேசியர்கள் வாட்சாப்பை பயன்படுத்துவதாக ‘த டிஜிட்டல் நியூஸ் ரிப்போர்ட் 2017 அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மலேசியாவில் வாட்சாப்பைத் தவிர முகநூல் (58%), யூ-டியூப் (26%), வீ சாட் (13%), இன்ஸ்தாகிராம் (13%) ஆகியவையும் போன்ற வலைத் தளங்களும் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. இதில் செய்திகளை சமூக வலைத் தளங்கள் வாயிலாக 86 விழுக்காட்டு, அச்சக ஊடகங்கள் (45%), தொலைக்காட்சி (54%), வானொலி (15%) மலேசியர்கள் பெறுகின்றனர். அதோடு மட்டுமின்றி விவேகக் கைப்பேசி (65%), கணினி (45%) மற்றும் கையடக்கக் கணினி (18%) ஆகியவையும் பயன்படுத்தப்படுவதாக தமது வலைப் பதிவில் சாலே சைட் கெருவாக் குறிப்பிட்டார்.
இதனிடையே, டிஎன்எஸ் குளோபல் என்ற மற்றுமொரு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி 77 விழுக்காட்டு விகிதத்தில் வாட்சாப்பையும் 41 விழுக்காட்டு விகிதத்தில் முகநூல் மெசெஞ்சரையும் உலகில் அதிகம் பயன்படுத்தக்கூடிய நாடு மலேசியாதான் என்று கூறுவதாக அவர் கூறினார்.