கோலாலம்பூர், ஆக.30 –
மலேசியாவின் தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஆஸ்ட்ரோ வானொலி மற்றும் எட்டிகா வழங்கும் OR1 FM உடன் Wonda Kopi Tarik, மலேசியாவின் அசல் ஆனச் சுவை-இன் ஒலிபரப்பை நேயர்கள் கேட்டு மகிழலாம். ஆகஸ்டு 30, காலை 6 மணி முதல் ஆகஸ்டு 31, 2023 நள்ளிரவு 12 வரை வானொலி மற்றும் SYOK செயலியில் மிகவும் அசல் ஆன மலேசிய வானொலி அனுபவத்தை உருவாக்க OR1 FM உடன் Wonda Kopi Tarik முதன்முறையாக மலாய், ஆங்கிலம், சீனம் மற்றும் தமிழ் ஆகிய 4 மொழிகளில் 17 வானொலி நிலையங்களை ஒன்றிணைக்கும். OR1 FM உடன் Wonda Kopi Tarik-இல் நேயர்கள் தங்களுக்குப் பிடித்தமானச் சிறப்பாகத் தொகுக்கப்பட்ட மலேசியப் பாடல்களைக் கேட்டு இரசிக்கலாம், ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம் மற்றும் மலேசியர்களின் தனித்துவத்தையும் நம்பகத்தன்மையையும் வெளிப்படுத்தும் அற்புதமான பல மொழி விவாதங்களை அனுபவிக்கலாம்.
இந்த நிகழ்வின் போது, Wonda Kopi Tarik, மலேசியாவின் அசல் ஆனச் சுவைப் போலவே, அசல் மலேசிய கலாச்சாரத்தின் பன்மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையைக் குறிக்கும் தனித்துவமான ஒலிபரப்பை நேயர்கள் கேட்டு மகிழலாம். அனைத்து வானொலி பிராண்டுகளின் சமூக ஊடகங்களில் OR1 FM உடன் Wonda Kopi Tarik–இன் புகைப்படம் மற்றும் காணொளிப் புதுப்பிப்புகளை நேயர்கள் கண்டு இரசிக்கலாம். மேலும் தங்களுக்குப் பிடித்த 60-க்கும் மேற்பட்ட அறிவிப்பாளர்கள் பாரம்பரிய உடை அணிந்திருப்பதையும் கண்டு மகிழலாம். அதுமட்டுமின்றி, இந்த காலகட்டத்தில் SYOK செயலியில் போட்டிகளின் மூலம் ரிம30,000 ரொக்கத்தில் ஒரு பங்கை வீட்டிற்குத் தட்டிச் செல்லும் வாய்ப்பையையும் நேயர்கள் பெறுவர். பங்கேற்க, இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
- , SYOK செயலியைத் தொடங்கவும் அல்லது bm.syok.my–ஐப் வலம் வரவும்
- போட்டியில் சேர உள்நுழைய வேண்டும் அல்லது பதிவுச் செய்ய வேண்டும்
- காணொளி’ தாவலைக் கிளிக் செய்து, SYOK நேரலை வாயிலாகப் போட்டியில் கலந்து கொண்டு கேள்விகளுக்குச் சரியாக பதிலளிக்கவும்.
இதைத் தவிர்த்து, இப்போது முதல் செப்டம்பர் 8 வரை, மலேசியர்கள் ‘ராகாவின் மர்ம மனிதன்!’ என்ற வானொலி போட்டியில் பங்கேற்று, ‘மர்ம மனிதன்’ ஒருவனைக் கண்டுபிடித்து, ரொக்கமாக ரிம10,000-இல் ஒரு பங்கை வீட்டிற்குத் தட்டிச் செல்லும் வாய்ப்பைப் பெறலாம். பங்கேற்கவும் மர்ம மனிதன் இருக்கும் இடத்தைப் பற்றியத் துப்புகளைப் பெறவும் இரசிகர்கள் வானொலி அல்லது SYOK செயலியில் ராகாவைக் கேட்க வேண்டும். பங்கேற்பாளர்கள் துப்புகளின்படி ‘மர்ம மனிதன்‘ இருக்கும் இடத்திற்குச் சென்று அவனைக் கண்டுபிடிக்க வேண்டும். பின் அவனிடம் ‘நீங்கள் தான் ராகாவின் மர்ம மனிதனா?’ என்றக் கேள்வியைக் கேட்க வேண்டும். நேயர் ஒருவர் ‘மர்ம மனிதனைச்‘ சரியாக அடையாளம் கண்டுவிட்டால், வெற்றியாளரை அறிவிப்பதற்காக அங்குள்ள குழுவினர் ராகாவை அழைப்பார்கள். வெற்றிப் பெற்ற பங்கேற்பாளர்கள் குறைந்தப்பட்சம் ரிம1000 ரொக்கப் பரிசை வீட்டிற்குத் தட்டிச் செல்வர். வெற்றியாளர் இல்லாவிட்டால் பரிசுத் தொகை அடுத்தச் சுற்றில் பனிப்பந்தாகும். மேல் விபரங்களுக்கு, ராகாவின் அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.