இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார்!

424

சென்னை, ஜன.26-

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரணி புற்றுநோய் காரணமாக நேற்று காலமானார்.

அவர் புற்று நோய் காரணமாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக சமீபத்தில் இலங்கை சென்றுள்ளார். ஆயுர்வேத சிகிச்சை பலனளிக்காத நிலையில் இலங்கையில் காலமானார்.

5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர் இலங்கையில் சிகிச்சை மேற்கொண்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.20 மணிக்கு மரணம் அடைந்தார் . இன்று மாலை அவர் உடல் சென்னை வந்தது.

பவதாரணிக்கு தற்போது 47 வயதாகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் பாடி பிரபலமானவர். இவரின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகியும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

பவதாரணி, திரை பின்னணி பாடகி, இசையமைப்பாளர், இளையராஜாவின் மகள்.கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி. இவர் அதிகளவில் தனது தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டும் பாடியுள்ளார். ஆனால், இவரது குரல் மிகவும் வித்யாசமானதாக இருக்கும். இவர் இளையராஜா இசையில் பாரதி படத்தில் பாடிய ‘ மயில்போல பொண்ணு ஒண்ணு’ பாடலுக்கு இவருக்கு சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருது கிடைத்தது.

ராசய்யா படத்தில் இவர் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அந்தப்பாடல் பெரிய ஹிட்டானதையடுத்து, இவர் தொடர்ந்து தனது தந்தை மற்றும் சகோதரர்களின் இசையமைப்பில் பாடல்கள் பாடினார். தேவா, சிற்பி ஆகியோருக்கும் பாடியுள்ளார்.

இவர் நடிகை ரேவதி இயக்கிய ‘மித்ர் மை பிரண்ட்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின்னர் இவர் தெலுங்கு பட உலகில் நுழைந்தார். இவர் ரேவதி இயக்கிய ‘பிர் மிலேங்கே ‘படத்திற்கும் இசையமைத்தார். இவர் வெள்ளிச்சி என்ற கிராமப்புற இசைக்கு நல்ல பெயர் வாங்கினார்.

இவர் சபரிராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் ஒரு விளம்பர நிறுவன நிர்வாகி. இவர் சென்னை ரோசரி மெட்ரிக் பள்ளியில் படித்தவர்.

அழகி படத்தில் இவர் பாடிய ‘ஒளியிலே தெரிவது தேவதையா’ என்ற பாடல் படு ஹிட்டானது. மேலும் இவர் பாடிய பல பாடல்கள் ஹிட்டானவை. இவற்றில் குறிப்பிடும்படியானவை, உல்லாசம் படத்தில் முத்தே முத்தம்மா, தனுஷ் நடித்த படத்தில் இவர் பாடிய அண்மையில் ஹிட்டான பாடல் ஆத்தாடி, ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ஆசப்பட்டு காத்திருக்கா டா என்பதாகும். இவர் வித்யாசமான குரல் வளம் கொண்டவர். இவரது குரலின் தனித்தன்மையே அவரது குரலை தனியாக அடையாளப்படுத்தி காட்டிவிடும்.

சமீபத்தில் பிளாக் ஷீப் சேனல் சார்பில் யுவன் 25 நிகழ்ச்சி நடத்தப்பட்டது. யுவன் ஷங்கர் ராஜா சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகியிருப்பதை கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் யுவன் ஷங்கர் ராஜா தந்தையான இசைஞானி இளையராஜா, அவரது சகோதரர் கார்த்திக் ராஜா, சகோதரி பவதாரணி உள்பட பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியின்போது அனைவரும் ஒன்றாக மேடையேறி பார்வையாளர்கள் முன்னிலையில் க்யூ்டடாக சண்டை போட்டுக்கொண்டனர்.

இதன் வீடியோவும் யூடியூப்பில் வைரலானது. அந்த நிகழ்வின்போது மேடையேறிய யுவன் ஷங்கர் ராஜா சகோதரர் கார்த்திக் ராஜா பேசும்போது, ” மியூசிக் நாங்க எல்லோருமே ஜாலியாகத்தான் பன்ன ஆரம்பிச்சோம்” என்று சொல்ல அதற்கு இளையராஜா, ” நான் மாட்டும்தான் சோலியா பன்னேன்” என கவுண்டர் கொடுக்க அரங்கமே கைதட்டலில் ஒலித்தது.


தொடர்ந்து பேசிய கார்த்திக் ராஜா, “அப்பாவுக்கு இசை தான் நாடி நரம்பு எல்லாமே. நாங்கள் அதை வைத்து பிஸ்னஸ் செய்கிறோம். அப்படித்தான் நாங்கள் கம்பேர் செய்து கொள்வோம்.

இசையையும் அப்பாவையும் பிரிக்க முடியாது. அவர் என்னைக்குமே ராஜாதான்” என்று பேசினார்.

அப்போது இளையராஜா நாங்களே நான்கு பேரும் முதல் முறையாக ஒரே மேடையில் இருப்பதாக கூற, யுவன் குறுக்கிட்டு எனக்கு முத்தம் கொடுத்ததும் இதுதான் முதல் முறை என்றார்.

இந்த கலகலப்பான தருணத்தில் பவதாரணியும் ஒரு விஷயத்தை பகிர்ந்தார். அப்போது அவர், “அப்பாவும், அம்மாவும் ஊருக்கு போயிருந்தார்கள். சின்ன பையனாக இருந்த யுவன் சோகமாக உட்கார்ந்திருந்தான். அப்போது பியானோ மீது கை வைத்து வாசித்தவாறே, டாடி மம்மி இப்போ எங்க போயிருக்காங்கன்னு சொல்லு. செல்லப்போறியா இல்லாட்டி நான் அழுகட்டா என பாடியதாக” க்யூட்டாக தெரிவித்தார்.


பவதாரணி தனது குடும்பத்தினருடன் கடைசியாக பங்கேற்ற பொது நிகழ்ச்சியாகவே இது திகழ்கிறது. திடீரென இவரின் இறப்பு செய்தி பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.