கோலாலம்பூர், மே 8-

பாமிலா லிங் என்ற மாது ஊழல் தடுப்பு ஆணையத்திற்குச் செல்லும் வழியில் அவரை இடைமறித்த 3 வாகனங்கள் போலி எண் பட்டையைப் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது.

இதனை கோலாலம்பூர் போலீஸ் தலைவர் ருஸ்டி இசா தெரிவித்தார்.

மின்னியல் அழைப்பு டாக்சியில் சென்ற அவர் கடத்தப்பட்டதாகவும் அதில் பயன்படுத்தப்பட்ட மூன்று கார்கள் போலியான எண் பட்டையைக் கொண்டிருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக அவர் சொன்னார்.

தொழிலதிபரான பாமிலா லிங் தாமே கடத்தலை ஜோடித்து நடத்தியிருப்பதாகக் கூறப்பட்டதை போலீஸார் மறுக்கவில்லை என்றும் அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும், நாட்டை விட்டு வெளியேறவில்லை என்றும் ருஸ்டி இசா குறிப்பிட்டார்.