கோலாலம்பூர், மே 9-பண முறைகேடு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு அரச மன்னிப்பை வழங்குவதற்கு 62.2 விழுக்காட்டு இந்திய சமூகத்தினர் ஆதரவு வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மலாய்க்காரர்கள் விரும்பும்போது பெரும்பாலோர் அதனை ஆதரிக்கவில்லை என்று தெரிகிறது.
தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வொன்றில், இது கண்டறியப் பட்டுள்ளதாகவும் பிரதமராகப் பதவியில் இருந்த காலத்தில் நஜிப் இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு வேறெந்த பிரதமரும் செய்யாத அளவில் நல்ல காரியங்களைச் செய்திருப்பதால், இந்திய சமூகம் அவரின் சேவையை மனதில் வைத்தே அவருக்கான ஆதரவை வெளிப்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.