சிங்கை, மே 10- மக்கள் ஓசை மூத்த புகைப்படக் கலைஞர் பி.மலையாண்டி எழுதிய ஆதி.குமணன் நூல் சிங்கப்பூர் புத்தக விழாவில் நேற்று அறிமுகம் கண்டது.
சிங்கப்பூர் சட்ட உள்துறை அமைச்சர் கா. சண்முகம் இப்புத்தகத்தை அறிமுகம் செய்தார்.
சிங்கப்பூர் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான நா.ஆண்டியப்பன் ஏற்பாட்டில் புத்தக விழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது.
நூலாசிரியர் பி.மலையாண்டி அமைச்சர் கா.சண்முகத்திடம் நூலை வழங்கினார்.