கோலாலம்பூர் மே 10-பதவிக்காக என்றில்லாமல் வருங்கால தலைமுறையினரின் நியாயத்திற்குக் குரல் கொடுப்பதற்காக கெஅடிலான் கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் பதவிக்குத் தான் போட்டியிடுவதாக ஃபாமி ஃபாட்சில் தெரிவித்தார்.
கெஅடிலான் கட்சியின் உயர்மட்ட பதவிகளுக்கு கடுமையான போட்டி நிலவும் நிலையில் தகவல் தொடர்பு துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சில்அதன்உச்சமன்றத்திற்குப் போட்டியிடுகிறார்.
லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரான ஃபாமி ஃ பாட்சில் நேற்று உச்சமன்ற உறுப்பினர் பதவிக்காக தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ஃபாமி ஃபாட்சில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக கெஅடிலான் கட்சியில் சேர்ந்து சேவையாற்றி வருகிறார்.
“கெஅடிலான் என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல. கொள்கை அடிப்படையிலான சீர்திருத்தத்திற்கான ஒரு தளம் என்று நான் நம்புகிறேன்” என்றார் .
“அந்த நோக்கத்திற்காக 1998 ஆம் ஆண்டு முதல் நேர்மை, விடாமுயற்சி மற்றும் துணிச்சல் ஆகியவற்றின் அடிப்படையில் போராட்டங்களைத் தொடர்கிறேன்” என்றார்.