பட்டர்வொர்த், ஏப். 10-கடந்த 2017ஆம் ஆண்டு பினாங்கிற்கு வந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்திய மாது அண்ணபூரணா ஜெங்கின்ஸின் சடலம் ஒரு கட்டுமானத் தளத்தில் 2020 ஜூன் 24ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அந்த மரணத்தில் சூது நடந்திருப்பதாக அவரின் குடும்பத்தினர், குறிப்பாக அவரின் மகன் கிரேகரி ஸ்டீவன் ஜென்கின்ஸ் வாதிட்டு வந்திருக்கும் வேளையில், அதனை விசாரித்த மரண விசாரணை நீதிமன்றம் 2023 மே 12ஆம் தேதி, விசாரணையில் அதனை கொலை என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அதனை கொலை என்று அறிவிக்க முடியாது என்று கூறியது.

இவ்வாண்டு ஏப்ரல் 24ஆம் தேதி அந்த வழக்கின் மேல் முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, அந்த மரணத்தை வகைப்படுத்த எந்தவிதமான ஆதாரமும் சாட்சியமும் கிடைக்காததால், மரண விசாரணை நீதிமன்றத்தின் முடிவை உறுதி செய்தாக அறிவித்தார்.