கோல திரெங்கானு, மே 10-

நாட்டில் போதைப்பொருளை உட்கொள்வோரில் 60 விழுக்காடு இளைஞர்கள் உட்பட்டிருப்பதாக தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் தலைவர் ருஸ்லான் ஜூசோ கூறினார்.

போதைப்பொருள் உட்கொள்ளும் 192,857 பேரில் 15லிருந்து 39 வயதுக்குட்பட்டோர் 115,714 பேர் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டைவிட 32.5 விழுக்காடு அதிகம் என்றும் திரெங்கானுவில் போதைப் பொருளைப் பயன்படுத்தும் 12,004 பேரில் இளைஞர்கள் 6,800 பேர் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பெரும்பாலோர் செயற்கையாக உருவாக்கப்பட்ட ‘பில் கூடா’ என்ற மாத்திரை வடிவிலான போதைப் பொருளைப் பயன்படுத்துவதாகவும் விவரித்தார்.