ஷா ஆலம்
மஇகா தனது எதிர்காலத் திசையைப் பேராளர்கள் முடிவு செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மஇகாவின் 79-ஆவது பொதுப் பேரவையில் தெரிவித்தார்.
ஷா ஆலம் IDCC-யில் நடைபெற்ற பொதுப் பேரவையில் உரையாற்றிய போது, மஇகா தனது எதிர்கால திசை மற்றும் வளர்ச்சி குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும் என்று அவர் பேராளர்களை வலியுறுத்தினார்.
அதுமட்டுமல்லாமல், மஇகாவுக்கான மிக பொருத்தமான மாற்று வழியைத் தேர்ந்தெடுக்க பேராளர்கள் தகுதி வாய்ந்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இன்றைய முடிவே வருங்காலத்தில் கட்சியின் திசையையும் வலிமையையும் நிர்ணயிக்கும் என்றார் அவர்.

