மாரான்:

பகாங் எதிர்க்கட்சித் தலைவரின் 17 வயது மகன், 16 வயது யுவதியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் புகாரில் மாரான் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட யுவதி அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், சந்தேக நபரின் வாக்குமூலம் மற்றும் இரத்த மாதிரிகளை சேகரித்த பின் அவரை விடுவித்தனர்.

தற்போது குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376-ன் கீழ் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.