டான்சா:
பாகிஸ்தானின் டான்சா அரசு மருத்துவமனையில் சுத்தமற்ற ஊசிகளை மீண்டும் பயன்படுத்தியதால் 331 குழந்தைகள் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளானது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
2024 நவம்பர் முதல் 2025 அக்டோபர் வரை இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதுகாப்பற்ற மருத்துவ நடைமுறைகள் காரணமாக இந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

