ஜாசின்:
மலாக்கா, ஜாசின் அருகே ஓடும் பேருந்தில் ஓட்டுநரின் மடியில் அமர்ந்து ஸ்டீயரிங்கைப் பிடித்தபடி இளம்பெண் ஒருவர் பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
விசாரணையில், பேருந்து ஓட்டும் ஆசையினால் இவ்வாறு செய்ததாகக் கூறிய 21 வயது பெண்ணையும், அதற்கு அனுமதித்த 36 வயது ஓட்டுநரையும் போலீஸார் கைது செய்தனர்.
மற்ற பயணிகளின் உயிருக்கு ஆபத்து விளைவித்ததற்காக, சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987-ன் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

