கோலாலம்பூர்:

16-வது பொதுத்தேர்தலில் இதர இந்தியக் கட்சிகளின் வரவு, மஇகாவின் நாடாளுமன்றத் தொகுதிகளைப் பாதிக்காது என்று அதன் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

பாரிசான் நேஷனலின் (BN) ஒட்டுமொத்த வெற்றிக்காக ‘Friends of BN’ கட்சிகளுக்கு வாய்ப்பளிப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று அவர் கூறினார்.

தோழமைக் கட்சிகளின் விசுவாசத்தைக் கருத்தில்கொண்டு, வரும் தேர்தலில் முறையான தொகுதிப் பங்கீடு செய்யப்படும் என BN தலைவர் டத்தோ ஸ்ரீ ஸாஹிட் ஹமிடி உறுதி அளித்துள்ளார்.