மலாக்கா:

மலாக்காவில் 3 வயது சிறுமி ஒருவரின் இரத்தத்தில் கஞ்சா (THC) கலந்திருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து, அவரது காப்பாளரின் மகனான 39 வயது சமூக ஊடகப் பிரபலம் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மலாக்கா மருத்துவமனையில் மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைந்த நிலையில், சந்தேக நபர் கடந்த ஏப்ரல் 15 முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

சிறார் சட்டம் 2001-ன் கீழ் போலீஸார் வழக்கைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் வேளையில், சந்தேக நபரின் முதற்கட்ட சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் ஏதும் கண்டறியப்படவில்லை.