மலேசிய இந்தியர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் இணைந்து ஏற்றமிகு எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க வேண்டுமென ம.இ.கா. மத்திய செயலவை உறுப்பினர் மதுரைவீரன் மாரிமுத்து தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

ஒற்றுமைதான் நமது பலம். அதை இழந்து விட்டால் அனைத்தையும் நாம் இழந்து விடுவோம். பிறந்திருக்கும் இந்த தீபத் திருநாள் நமது ஒற்றுமைக்கு வழிவகுக்கட்டுமென அவர் தெரிவித்தார்.