தித்திக்கும் இந்தத் தீபத் திருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து மலேசியர்களுக்கும் தமது மனமார்ந்த தீபாவளித் திருநாள் வாழ்த்துகளைக் கூறிக்கொண்டிருக்கிறார் ம.இ.கா. தேசிய மகளிர் தலைவி டத்தோ மோகனா முனியாண்டி.
மலேசியா இந்திய பெண்கள், குடும்ப மாதர்கள், இளைஞர்கள், பெரியோர்கள், சிறியோர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் தீபத் திருநாளை அன்போடும் பாசத்தோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாட வேண்டுமென்று அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
அதே வேளையில், பெண்கள் இன்னாளில் புதிய சிந்தனைக்கு வித்திட்டு மறுமலர்ச்சியோடு சிறந்த எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.