உலு சிலாங்கூர், அக். 21 –
ஜாலான் கெமுந்திங் 2, புக்கிட் பெருந்துங்கில் உள்ள எண்ணெய் நிலையத்திற்கு அருகாமையில் வாகனங்கள் நிறுத்துவதற்கான கட்டுமான பகுதியில் மனித மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டது.

நேற்று மாலை மணி 5.50 அளவில் அங்கு வேலை செய்து வந்த குத்தகைத் தொழிலாளி ஒருவர் அந்த மண்டை ஓட்டைக் கண்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டெண்டன் லிம் பாக் பாய் தெரிவித்தார்.

அந்தப் பகுதியில் மண்டை ஓட்டைத் தவிர வேறு எலும்புப் பகுதிகள் தென்படவில்லை; சம்பந்தப்பட்டவரின் அடையாளம் அங்கில்லை. இந்த மண்டை ஓட்டுக்கு உரியவர் யார் என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக லிம் பாக் பாய் குறிப்பிட்டார்.