லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரூ. 400 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘2.0 படத்தில் இசை வெளியீட்டு விழா துபாயில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் நடிகர் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், ராஜு மகாலிங்கம் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்ச்சியை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஆர்.ஜே.பாலாஜி, ராணா டகுபதி, கரன் ஜோஹர் தொகுத்து வழங்கினர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் உருவான இரு பாடல்களை அவர் தனது குழுவினருடன் நேரிடையாக இசைத்து அசத்தினார்.

ஆயினும், 2.0 பாடல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே இணையத்தளங்களில் லீக் ஆனதாக கூறப்படுகிறது. இப்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள அவ்விரு பாடல்களை இசை ரசிகர்கள் கேட்டு ரசித்து வருகின்றனர். படத்தில் மொத்தம் பாடல்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது 2 பாடல்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. மீதமிருக்கும் ஒரு பாடலும் இன்னும் சில நாட்களின் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.