தமிழ் சினிமாவில் தனது பேச்சாலும் செயலாலும் ஒரு மாறுப்பட்ட கதாநாயகனாக தென்படுபவர் நடிகர் விஜய் சேதுபதி.  இன்றைய தேதியில் இவரைப் பிடிக்காது என்று சொல்பவர் இல்லை  என்று கூறலாம். தாம் ஒரு முன்னணி ஹீரோவாக வலம் வந்தாலும் கூட, அதையும் தாண்டி இமேஜ் பார்க்காமல் நடிப்புக்கு சவால் விடும் எந்தவித கேரக்டரிலும் நடிக்க தயங்காதவர்.

இப்போது இவரது நடிப்புக்கு மேலும் தீனி போடும் வகையில், மலையாளத்தில் மோகன்லாலுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

மோகன்லாலா, மம்முட்டியா..? உங்களை கவர்ந்தது யார் என்கிற கேள்விக்கு, மோகன்லால் தான் என பதில் கூறியுள்ள விஜய்சேதுபதி. ‘தன்மாத்ரா’ என்கிற படத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்டநாள் ஆசை என கூறியுள்ளார்.

அந்தப்படத்தில் அல்சீமர் என்கிற ஞாபக மறதி குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்ட மத்திய வயது நபராக, இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக அற்புதமாக நடித்திருந்தார் மோகன்லால்.

எனவே, கூடிய விரைவில் இந்த கதாபாத்திரத்தின் மூலம்  விஜய் சேதுபதில் நம மனதில் இன்னும் ஆழமாய் இடம் பிடிப்பார்.