மென்செஸ்டர், டிச.2 –
இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் முதலிடத்தில் இருக்கும் மென்செஸ்டர் சிட்டி, வெஸ்ட் ஹேம் யுனைடெட்டை சந்திக்கவுள்ளது. இந்த ஆட்டத்தில் முக்கிய ஆட்டக்காரர்கள் சிலருக்கு மஞ்சள் அட்டை கொடுக்கப்பட்டு அடுத்த ஆட்டத்தில் தடையை எதிர்நோக்ககூடும் என தாம் அஞ்சுவதாக நிர்வாகி பெப் குவார்டியோலா தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் ஹேம் யுனைடெட்டுக்கு எதிரான ஆட்டத்தில் மஞ்சள் அட்டைப் பெற்றால், அடுத்த வாரம் நடைபெறவுள்ள மென்செஸ்டர் டார்பி ஆட்டத்தில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படலாம் என குவார்டியோலா தெரிவித்தார். குறிப்பாக லெரோய் சானே, பெர்னான்டின்ஹோ, வின்சென் கொம்பானி மஞ்சள் அட்டையைப் பெற்றிருக்கின்றனர்.
இதில் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு ஆட்டக்காரருக்கு ஓய்வு கொடுக்க குவார்டியோலா ஆலோசித்துள்ளார். இதனிடையே வெஸ்ட் ஹேம் யுனைடெட் அணிக்கு எதிராக வெற்றி பெற்றால் மென்செஸ்டர் சிட்டி தொடர்ச்சியாக தனது 13 ஆவது வெற்றியைப் பதிவுச் செய்யும்.
2001/02 ஆம் ஆண்டில் அர்செனல், 2016/17 ஆம் பருவத்தில் செல்சி பதிவு செய்த சாதனையை மென்செஸ்டர் சிட்டி சமன் செய்யும்.