நெடுந்தூர சைக்கிளோட்ட வீரர் ஏ. சத்தியன், மலேசியர்களில் சிறந்த வீரராக சாதனை படைத்துள்ளார்.
அக்டோபர் 12 முதல் 18 வரை நடைபெற்ற Peninsular Divide போட்டியில் மொத்தப் பிரிவில் மூன்றாம் இடம் பெற்றார். இந்த முக்கிய சாதனையையடுத்து, 42 வயதான அவர் தனது அடுத்த பெரிய சவாலுக்கான திட்டங்களை ஏற்கனவே தொடங்கி விட்டார்.
Peninsular Divide என்பது மலேசிய தீபகற்பத்தை முழுவதும் கடக்கும், உலகளாவிய தரம் வாய்ந்த அதிகத் தாங்கும் திறன் சைக்கிள் போட்டி.
சத்தியன், ஜொகூர் Pengerang–இருந்து பெர்லிஸின் Wang Kelian வரை பயணம் செய்து, மொத்த 1,527 கிலோமீட்டர் தூரத்தையும், 21,000 மீட்டர் உயர ஏற்றத்தையும் கடந்து, 101 மணி 1 நிமிடத்தில் இலக்கை அடைந்தார்.
இந்த ஆண்டு போட்டியில் 47 உள்ளூர் மற்றும் சர்வதேச சைக்கிள் வீரர்கள் பங்கேற்றனர். இங்கிலாந்தைச் சேர்ந்த லா டார்டரூகா, 81 மணி 38 நிமிடங்களில் வெற்றியாளர் பட்டத்தை வென்றார்.
2024ஆம் ஆண்டு வெற்றியாளரான இந்தோனேசியாவின் ஹாண்டிகா, 85 மணி 5 நிமிடங்களில் முடித்து இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
இந்த கடினமான போட்டிப் பாதையை, எல்லா வீரர்களும் 156 மணிநேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற விதியும் கடைப்பிடிக்கப்பட்டது.

