கோலாலம்பூர்:

உலகளாவிய எரிசக்தி நெருக்கடியால் எண்ணெய் விலை உயர்ந்ததால், RON95 மானியம் காரணமாக நாட்டின் நிதி மீது அழுத்தம் அதிகரித்துள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

தற்போது மானியத்தைத் தொடர்ந்து வழங்க அரசு முயற்சி செய்து வருவதுடன், அதன் நீடிப்பு குறித்து ஆய்வு நடைபெறுகிறது.

மக்கள் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.